கிறிஸ்தவ மதம் மாறச் சொன்ன பள்ளி நிர்வாகம்: ஆசிரியை புகார் மீது உயர் நீதிமன்றம் உத்தரவு
கட்டாயம் கிறிஸ்தவ மதம் மாறச் சொன்ன பள்ளி நிர்வாகத்தின் மீது ஆசிரியை அளித்த புகார் மீது வழக்குப் பதிவு செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
கட்டாயம் கிறிஸ்தவ மதம் மாறச் சொன்ன பள்ளி நிர்வாகத்தின் மீது ஆசிரியை அளித்த புகார் மீது வழக்குப் பதிவு செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
ராஞ்சியில் செயல்பட்டு வரும் கார்மல் பள்ளியில் நளினி நாயக் என்ற ஆசிரியை அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் 3 நிர்வாகிகள் மீது கட்டாயம் மதம் மாற மிரட்டியதாக போலீஸில் புகார் அளித்தார். ஆனால், போலீஸார் அதை வழக்குப் பதிவு செய்ய மறுத்ததாகக் கூறி ராஞ்சி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்நிலையில், இவ்வழக்கு மீதான விசாரணை செவ்வாய்கிழமை நடைபெற்ற நிலையில், அப்புகாரின் போரில் உடனடியாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என போலீஸாருக்கு ராஞ்சி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
Advertisement
முன்னதாக, கார்மல் பள்ளியில் கிறிஸ்தவ மதம் மாறுவதாக அளித்த ஒப்புதலின் பேரிலேயே அவருக்கு அங்கு பணி நிரந்தரம் செய்யப்பட்டதாகவும், பின்னர் அதற்கு மறுத்ததால் தொடர்ந்து மிரட்டியும், பணி நீக்கம் செய்ததாக ஆசிரியை நளினி நாயக் தனது புகாரில் தெரிவித்துள்ளார்.