முகப்பு
இந்தியா

சபரிமலை விவகாரம்: கேரள சட்டப்பேரவையில் இரண்டாவது நாளாக கடும் அமளி 

சபரிமலை விவகாரம் தொடர்பாக கேரள சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிகள் இரண்டாவது நாளாக வியாழனன்றும் கடும் அமளியில் ஈடுபட்டன. 

Updated On : 30 ஜனவரி, 2024 at 5:45 PM
பகிர்:

திருவனந்தபுரம்: சபரிமலை விவகாரம் தொடர்பாக கேரள சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிகள் இரண்டாவது நாளாக வியாழனன்றும் கடும் அமளியில் ஈடுபட்டன. 
 
சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களும் வழிபடலாம் என்ற  உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை அடுத்து கேராளாவில் தொடந்து பதற்றமான சூழல் நிலவி வருகிறது. 

அதன் தொடர்ச்சியாக மகரவிளக்கு சீசனுக்காக தற்போது நடை திறக்கப்பட்ட நாட்களில் இருந்து போலீஸார் பக்தர்களுக்கு கடும் கெடுபிடிகளை விதித்து வருகின்றனர். இதன் காரணமாக அங்கு தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. 

கேரள சட்டப்பேரவை கூட்டத்தொடரின் இரண்டாவது நாளான புதனன்று இவ்விவகாரம் தொடர்பாக கடும் அமளி ஏற்பட்டது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக கூட்டணி கட்சி எம்.எல்.ஏக்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். அதேபோல் பாஜகவினரும் கடும் அமளியில் ஈடுபட்டனர். 

சபரிமலை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் விதிக்கப்பட்ட கெடுபிடிகளை அகற்றும் வரை அவையை நடத்த விடமாட்டோம் என்று கோஷமிட்டுக் கொண்டு, கையில் பேனர்கள், மற்றும் அட்டைகள் ஏந்தியவாறு அவையில் தொடர்ந்து கடும் அமளியில் ஈடுபட்டனர். 

இந்நிலையில் சபரிமலை விவகாரம் தொடர்பாக கேரள சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிகள் இரண்டாவது நாளாக வியாழனன்றும் கடும் அமளியில் ஈடுபட்டன. 
 
இரண்டாவது நாளாக வியாழனன்றும் கேரள சட்டப்பேரவையில் இந்த விவகாரத்தால் கடும் அமளி ஏற்பட்டது. சபரிமலை விவகாரம் குறித்து பேரவையில் ஆலோசனை நடத்த வேண்டும் என வலியுறுத்தி காங்கிரஸ் தலைமையிலான யூடிஎப் கூட்டணி எம்.எல்.ஏக்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். 

அவை துவங்கியதும் தங்கள் இருக்கைகளில் எழுந்து நின்ற  உறுப்பினர்கள், கேள்வி நேரத்தை ரத்து செய்து விட்டு சபரிமலை விவகாரம் குறித்து விவாதம் நடத்த வேண்டும் என சபாநாயகர் ஸ்ரீராமகிருஷ்ணனுக்கு கோரிக்கை வைத்து கோஷம் எழுப்பினர். அத்துடன் அது தொடர்பான பதாகைகளையும் கைகளில் எந்தியிருந்தனர்.  

ஆனால் உறுப்பினர்களின் அந்த கோரிக்கை ஏற்கப்படாததால் உறுப்பினர்கள் தொடர் அமளியில் ஈடுபட்டதன் காரணமாக சட்டப்பேரவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. 

முழு கட்டுரையைப் படிக்க →