தில்லியில் லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளின் இரண்டு நாள் மெகா பேரணி
விவசாயக் கடன் தள்ளுபடி, வேளாண் பொருட்களுக்கு விலை நிர்ணயம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தில்லியில் இன்று விவசாயிகளின் இரண்டுநாள் பேரணி தொடங்கியது.
புது தில்லி: விவசாயக் கடன் தள்ளுபடி, வேளாண் பொருட்களுக்கு விலை நிர்ணயம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தில்லியில் இன்று விவசாயிகளின் இரண்டுநாள் பேரணி தொடங்குகிறது.
இன்று ராமலீலா மைதானம் நோக்கியும், நாளை நாடாளுமன்றம் நோக்கியும் பேரணி நடத்தத் திட்டமிட்டுள்ள விவசாயிகள், ஆந்திரா, குஜராத், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, தமிழகம், மேற்கு வங்கம், உத்தரப்பிரதேசம் என நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து தில்லியில் ஒன்று திரண்டுள்ளனர்.
ஏராளமானோர் ரயில்கள் மூலம் இன்று காலை தில்லி வந்து இறங்கியுள்ளனர். பலரும் பஞ்சாப், ஹரியானா பகுதிகளில் இருந்து சாலை மார்கமாகவும் தில்லி வந்தடைந்துள்ளனர்.
சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் தில்லியில் ஒன்றிணைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.