இந்தியா

அனைவருக்கும் சமமான பொருளாதார வளர்ச்சி தேவை: பிரணாப் முகர்ஜி

அனைவருக்கும் சமமான பொருளாதார வளர்ச்சி தேவை என முன்னாள் குடியரசுத் தலைவர் பிராணப் முகர்ஜி தெரிவித்தார்.

ENS

அனைவருக்கும் சமமான பொருளாதார வளர்ச்சி தேவை என முன்னாள் குடியரசுத் தலைவர் பிராணப் முகர்ஜி தெரிவித்தார்.

பெங்களூரில் உள்ள க்ரீன்உட் சர்வதேச பள்ளியின் வர்தூர் வளாகத்தில் சுமார் 5,500 மாணவர்களுடனான கலந்துரையாடல் நிகழ்வு புதன்கிழமை நடைபெற்றது. இதில் முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கலந்துகொண்டார். அப்போது அவர் மாணவர்களிடையே பேசியதாவது:

இந்தியாவில் உள்ள அனைவருக்கும் சமமான பொருளாதார வளர்ச்சி ஏற்பட வேண்டும். குறிப்பாக சமுகப் பொருளாதாரத்தில் பின்னணியில் இருப்பவர்களுக்கு இந்த சமதளம் சென்றடைய வேண்டும். கல்வியால் மட்டுமே ஒரு சமூதாயத்தை சிறந்த பொருளாதார வளர்ச்சிக்கு கொண்டு செல்ல முடியும். அப்போதுதான் சமூகத்தில் உள்ள ஏற்றத்தாழ்வுகளை சரிசெய்ய முடியும். 

நமது தேசத்தில் உள்ள நாம் அனைவரும் சமமானவர்கள் தான். ஒருவரிடையே மாற்றத்தை ஏற்படுத்தவில்லை என்றால் அக்கல்வி அர்த்தமற்றது என மகாத்மா காந்தி குறிப்பிட்டுள்ளார். எனவே நம் வாழ்வின் எக்காலத்திலும் கற்றல் என்பது இருக்க வேண்டும், கற்பதில் எந்த தடையும் இருக்கக் கூடாது என்று தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பேராவூரணியில் ஜெயலலிதா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம்

ஜாா்க்கண்ட்: விமான விபத்தில் 7 போ் உயிரிழப்பு

இலவச வீட்டுமனை கேட்டு பொதுமக்கள் ஆா்ப்பாட்டம்

காருக்குள் இறந்து கிடந்த இளைஞா்: போலீஸாா் விசாரணை

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: உறவினருக்கு 20 ஆண்டுகள் சிறை

SCROLL FOR NEXT