இந்தியா

இந்தோனேஷிய பேரழிவு: உதவிக்குச் செல்லும் இந்திய விமானப்படை

 இந்தோனேஷியாவில் ஏற்பட்ட பேரழிவு மீட்புப் பணிகளுக்கு இந்திய விமானப் படை சார்பில் மனிதாபிமான அடிப்படையில் உதவி செய்யப்படவுள்ளது. 

DIN

இந்தோனேஷியாவில் கடந்த வெள்ளிக்கிழமை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் மற்றும் அதனைத் தொடர்ந்து சுனாமி என அடுத்தடுத்து இயற்கை சீற்றங்கள் ஏற்பட்டன. ரிக்டர் அளவுகோலில் 7.5 அலகுகளாகப் பதிவான இந்த நிலநடுக்கம், 10 கி.மீ. ஆழத்தில், உள்ளூர் நேரப்படி மாலை 6 மணிக்கு ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது. இதையடுத்து 1.5 மீட்டர் உயரத்துக்கு சுனாமி அலை ஏற்பட்டது. 

இப்பேரழிவு காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,234 - ஆக அதிகரித்துள்ளது. மேலும், மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் உயிரிழப்புகள் அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

இந்நிலையில், இந்தோனேஷியாவில் ஏற்பட்ட பேரழிவு மீட்புப் பணிகளுக்கு இந்திய விமானப் படை சார்பில் மனிதாபிமான அடிப்படையில் உதவி செய்யப்படவுள்ளது. இதில் சி-130ஜே மற்றும் சி-17 ஆகிய இரு விமானங்களில் 37 பேர் அடங்கிய மருத்துவக் குழுவுடன் மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசிய நிவாரணப் பொருட்களுடன் அனுப்பப்பட்டுள்ளது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஓவல் டெஸ்ட்டில் டிஆர்எஸ் சர்ச்சை; கள நடுவர் செய்தது சரியா?

சாலையோரத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரின் சடலம்.. ராஜஸ்தானில் அதிர்ச்சி!

கட்டாய மதமாற்ற வழக்கு: கேரள கன்னியாஸ்திரிகளுக்கு ஜாமீன்

முதல்வர் மீது விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு நம்பிக்கை இல்லை: நயினார் நாகேந்திரன்

வாக்காளர் பட்டியலில் என் பெயர் இல்லை! - தேஜஸ்வி யாதவ் பரபரப்பு குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT