இந்தியா

பிரதமர் மோடியின் மூன்று மந்திரங்களை பின்பற்றினால் இந்தியா பெரிய பொருளாதார நாடாக மாறும்: வெங்கய்ய நாயுடு

DIN

புதுச்சேரி: பிரதமர் மோடியின் மூன்று மந்திரங்களைப் பின்பற்றினால் இந்தியா பெரிய பொருளாதார நாடாக மாறும் என்று மருத்துவக் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் துணை ஜனாதிபதி வெங்கய்ய நாயுடு தெரித்துள்ளார். 

புதுச்சேரி கோரிமேடு பகுதியில் அமைந்துள்ள ஜிப்மர் மருத்துவக்கல்லூரி பட்டமளிப்பு விழா  வெள்ளியன்று நடைபெறது. இந்த விழாவில் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பட்டங்களை வழங்கினார். 

இந்த நிகழ்வில் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு பேசியதாவது:
 
இந்தியாவின் வளர்ச்சிக்கு என்று பிரதமர் மோடி சீர்சிருத்தம், செயல்பாடு மற்றும் மாற்றம் ஆகிய மூன்று மந்திரங்களைபரிந்துரைக்கிறார். இந்த மூன்று மந்திரங்களை மாணவர்கள் கடைபிடிக்க வேண்டும். அவ்வாறு கடைபிடித்து இந்தியா இதே உத்வேகத்துடன் சென்றால் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக மாறும்.  

நாட்டு மக்களின் அடிப்படை தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. படித்து முடித்து பணிபுரிய எங்கு வேண்டுமானாலும் செல்லுங்கள், ஆனால் நமது நாட்டிற்கு செய்ய வேண்டிய கடமையைச் செய்யுங்கள்.
 
மதம், மொழி,கலாச்சாரம் ஆகியவற்றால் நாம் வேறுபட்டாலும் அடிப்படையில் நாம் அனைவரும்  இந்தியர். நாட்டு மக்களின் தேவைகளை நிறைவேற்ற மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்பட வேண்டும். 

இவ்வாறு அவர் பேசினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

‘அரண்மனை 4’ - மிகப்பெரிய வெற்றி: குஷ்புவின் வைரல் பதிவு!

குங்குமப்பூவும் கொஞ்சும் விழிகளும்..

SCROLL FOR NEXT