பாலியல் சீண்டலில் ஈடுபட்ட வங்கி அதிகாரியை பெண் ஒருவர் வெளுத்து வாங்கிய விடியோ வைரலாகப் பரவி வருகிறது.
கர்நாடக மாநிலம் தேவனகிரியை அடுத்துள்ள நிஜலிங்கப்பா எனுமிடத்தில் இச்சம்பவம் 15-ஆம் தேதி திங்கள்கிழமை நடைபெற்றுள்ளது. அதில், அப்பகுதியில் வசிக்கும் பெண் ஒருவர் வங்கிக் கடன் வேண்டி விண்ணப்பித்துள்ளார்.
அதற்கு அந்தப் பெண்ணை தனது வீட்டுக்கு அழைத்த வங்கி மேலாளர், பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். மேலும் வங்கிக் கடனுக்கு ஒப்புதல் வழங்க தன்னுடன் இணக்கமாக நடந்துகொள்ளும்படியும் மிரட்டியுள்ளார்.
இந்நிலையில், தகாத முறையில் நடக்க முயன்ற அந்த வங்கி மேலாளரை வீட்டில் இருந்து வெளியே இழுத்துக் கொண்டு வந்த அந்தப் பெண் அவரை சரமாரியாகத் தாக்கினார். மேலும் போலீஸாரிடம் புகார் அளித்தார். இதையடுத்து அந்த வங்கி மேலாளர் சிறையில் அடைக்கப்பட்டார்.