இந்தியா

சபரிமலை விவகாரம்: மூன்று மாநில தலைமைச் செயலாளர்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் கடிதம்  

DIN

புது தில்லி: சபரிமலை விவகாரம் தொடர்பாக  கேரளா,தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநில தலைமைச் செயலாளர்களுக்கு, மத்திய உள்துறை அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது.  

சபரிமலையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அய்யப்பனை தரிசனம் செய்யயச் சென்ற இரண்டு பெண்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்,. இதன் காரணமாக அங்கு தொடர்ந்து பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது.

இந்நிலையில் சபரிமலை விவகாரம் தொடர்பாக  கேரளா,தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநில தலைமைச் செயலாளர்களுக்கு, மத்திய உள்துறை அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது.  

இதுதொடர்பாக உள்துறை அமைச்சகம் அனுப்பியுள்ள கடிதத்தில், ' தேவையான பாதுகாப்பு  ஏற்பாடுகளை சபரிமலையில் செய்யவேண்டும்.  அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறாமல் தடுக்க  முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும். தேவைப்பட்டால் சில தடை உத்தரவுகளை  பிறப்பிக்கலாம். சமூக வலைதளங்கள், வலைதளங்கள் சேவையை முடக்கலாம்' என்று தெரிவிக்கபட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எங்கே செல்வது? கதறும் பாலஸ்தீன மக்கள்!

ஹவாலா முறையில் ரூ.100 கோடி.. கேஜரிவால் வழக்கில் அமலாக்கத் துறை அடுக்கும் ஆதாரங்கள்

ஜெயக்குமார் மரணம்: விசாரணையில் அடுத்தடுத்து திருப்பம்!

தங்கலான் வெளியீட்டுத் தேதி இதுதானா?

வாரணாசி கோவிலில் கொல்கத்தா அணி வீரர்கள்!

SCROLL FOR NEXT