இந்தியா

ஆணின் திருமண வயதை 18 ஆக குறைக்கக் கோரி வழக்கு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடி 

ஆணின் திருமண வயதை 18 ஆக குறைக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட பொது நல வழக்கைத் தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

DIN

புது தில்லி: ஆணின் திருமண வயதை 18 ஆக குறைக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட பொது நல வழக்கைத் தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

தில்லியைச் சேர்ந்த வழக்குரைஞரான  ராகேஷ் பாண்டே என்பவர் உச்ச நீதிமன்றத்தில் பொது நல வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்தார். அதில் அவர் கூறியிருந்தாவது:

ஆணின் திருமண வயது என்பது 21 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்தியாவில் வாக்குரிமையைச் செலுத்தவும், ராணுவம் உள்ளிட்ட பாதுகாப்பு படைகளில் சேரவும் குறைந்த பட்ச வயதாக 18 நிர்ணயிக்கப்பட்டிருக்கும் போது, திருமணத்திற்கு மட்டும் ஏன் 21 ஆகி இருக்க வேண்டும்? எனவே ஆணின் திருமண வயதை 18 ஆக குறைக்க உத்தரவிட வேண்டும். 

இவ்வாறு அவர் தெரிவித்திருந்தார். 

இந்த மனுவானது உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ரஞ்சன் கோகாய் மற்றும் சஞ்சய் கிஷன் கவுல் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் திங்களன்று விசாரணைக்கு வந்தது. 

அப்போது இதுதொடர்பாக தனியாக மனு தாக்கல் செய்தால் விசாரிக்கலாம்; ஆனால் இதை பொதுநல வழக்காக தாக்கல் செய்வது நீதிமன்ற நேரத்தை வீணடிக்கும் செயல் என்று கூறிய நீதிபதிகள், மனுவைத் தள்ளுபடி செய்ததுடன், ராகேஷ் பாண்டேவுக்கு ரூ. 25 ஆயிரம் அபராதம் விதித்தும் உத்தரவிட்டனர்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மயானத்துக்கு சடலம் கொண்டு செல்ல எதிா்ப்பு: உறவினா்கள் சாலை மறியல்

ஜூலையில் யமுனை நீரின் தரத்தில் மேம்பாடு: அமைச்சா் சிா்சா

மழை: நெல் மூட்டைகள் நனைந்து சேதம்!

இரு இடங்களில் கஞ்சா விற்ற மூவா் கைது

நாளைய மின் தடை: கடலூா் (கேப்பா் மலை)

SCROLL FOR NEXT