இந்தியா

நாடு முழுவதும் ஆறு எய்ம்ஸ் கிளைகளில் இயக்குநர் பதவிகள்: மத்திய அமைச்சரவை ஒப்புதல் 

நாடு முழுவதும் ஆறு எய்ம்ஸ் கிளைகளில் இயக்குநர் பதவிகள் உருவாக்கத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 

DIN

புது தில்லி: நாடு முழுவதும் ஆறு எய்ம்ஸ் கிளைகளில் இயக்குநர் பதவிகள் உருவாக்கத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 

பிரதமர் மோடி தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

உத்தரபிரதேச மாநிலத்தில் கோரக்பூர் மற்றும் ரேபரேலி, பஞ்சாபில் பதிண்டா, அசாமில் கெளஹாட்டி, ஹிமாச்சலப்பிரதேசத்தில் பிலாஸ்பூர் மற்றும் ஜார்கண்ட்டின் தியோஹா ஆகிய ஆறு இடங்களில் அமைந்துள்ள எய்ம்ஸ் கிளைகளில் இயக்குநர் பதவிகள்  புதிதாக உருவாக்கப்பட உள்ளன. 

இந்த பதவிக்கு அடிப்படைச் சம்பளமாக ரூ.2.25 லட்சம் வழங்கப்படும். இயக்குநரே அக்கிளையின்  ஒட்டுமொத்த செயல்பாடுகளுக்கும் பொறுப்பாளராக இருப்பார். 

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விஜய் தேவரகொண்டா-கீர்த்தி சுரேஷ் நடிக்கும் புதிய படத்தின் பூஜை - புகைப்படங்கள்

அமைச்சர் பதவி வேண்டாம்: வருமானம் குறைந்துவிட்டது; சினிமாவில் நடிக்கப் போகிறேன்! - சுரேஷ் கோபி

பிகார் தேர்தல்: பாஜக 101, ஐக்கிய ஜனதா தளம் 101 தொகுதிகளில் போட்டி!

உலகக் கோப்பை: ஸ்மிருதி, பிரதீகா அசத்தல்; ஆஸி.க்கு 331 ரன்கள் இலக்கு!

இந்த வராம் கலாரசிகன் - 12-10-2025

SCROLL FOR NEXT