இந்தியா

பெங்களூரு பல்கலை மாணவர்களாக சேர்ந்திருக்கும் சசிகலா மற்றும் இளவரசி

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட வி.கே. சசிகலா மற்றும் அவரது உறவினர் இளவரசி ஆகியோர் பெங்களூரு பல்கலையின் மாணவர்களாக சேர்க்கை பெற்றுள்ளனர்.

ENS


பெங்களூரு: அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட வி.கே. சசிகலா மற்றும் அவரது உறவினர் இளவரசி ஆகியோர் பெங்களூரு பல்கலையின் மாணவர்களாக சேர்க்கை பெற்றுள்ளனர்.

ஏற்கனவே சசிகலா பெங்களூரு பல்கலைக்கழகத்தின் தொலைதூரக் கல்வி முறையில் சேர்ந்து பயின்று வரும் நிலையில், இளவரசியும் தற்போது சேர்ந்துள்ளார்.

இளவரசி, 15 நாட்கள் பரோலில் வெளியே வருவதால், பெங்களூரு பல்கலைக் கழகத்தின் தொலைதூரக் கல்வி முறையில் சேர்வதற்கான நடைமுறைகள் வியாழக்கிழமையே நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.

பெங்களூரு பல்கலைக்கழகத்தின் ஊழியர்கள் பரப்பன அக்ரஹாரா மத்திய சிறைக்கே வந்து மாணவ சேர்க்கையை செய்து முடித்துள்ளனர்.

ஏற்கனவே சசிகலா பெங்களூரு பல்கலைக்கழகத்தில் கன்னடம் பயிலும் வகுப்பில் சேர்க்கை பெற்றதோடு, இளவரசியையும் படிக்குமாறு அழைப்பு விடுத்தார். அதையடுத்து இளவரசியும் தொலைதூரக் கல்வியில் சேர்ந்துள்ளார்.

இவர்களுக்கான புத்தகங்கள் வழங்கப்பட்டு, பல்கலைப் பேராசிரியர்கள் சிறைக்கேச் சென்று இருவருக்கும் பாடம் நடத்துவார்கள் என்று பல்கலைக்கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காவல் துறை சாா்பில் போக்குவரத்து விழிப்புணா்வு

உலக சிந்தனை நாள் விழிப்புணா்வு பேரணி

மேல்மருவத்தூா்: 10,000 பக்தா்கள் ஸ்ரீசக்கரம் வரைந்து கூட்டு வழிபாடு செய்து உலக சாதனை

செங்கல்பட்டு குறைதீா் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள்

கைலாசநாதா் கோயில் கும்பாபிஷேகம்

SCROLL FOR NEXT