முகப்பு
இந்தியா

ராகுல் காந்தி என்ன கோத்திரம்?: பாரதிய ஜனதா கேள்வியால் சர்ச்சை 

ராகுல் காந்தி என்ன கோத்திரம்? என்று பாரதிய ஜனதா எழுப்பியுள்ள கேள்வி சர்ச்சையை உண்டாக்கியிருக்கிறது. 

Updated On : 29 அக்டோபர் 2018, 3:34 pm IST
பகிர்:


இந்தூர்: ராகுல் காந்தி என்ன கோத்திரம்? என்று பாரதிய ஜனதா எழுப்பியுள்ள கேள்வி சர்ச்சையை உண்டாக்கியிருக்கிறது. 

விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள ராஜஸ்தானில் தேர்தல் பிரசாரம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பிரசாரத்தின் ஒரு பகுதியாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தற்போது உஜ்ஜயினியில் இருக்கிறார். 

திங்களன்று காலை அங்குள்ள புகழ்பெற்ற மஹாகாளேஸ்வர் கோவிலுக்குச் சென்ற அவர் அங்கு வழிபாட்டில் ஈடுபட்டார். அப்போது அவர் பூணூல் அணிந்திருந்தது பலரையும் ஆச்சர்யத்துக்குள்ளாக்கியது. 

Advertisement

Advertisement

இந்நிலையில் ராகுல் காந்தி என்ன கோத்திரம்? என்று பாரதிய ஜனதா எழுப்பியுள்ள கேள்வி சர்ச்சையை உண்டாக்கியிருக்கிறது. 

இந்தூரில் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த பாஜகவின் செய்தித் தொடர்பாளார் சம்பிட் பத்ரா இதுகுறித்து பேசும்போது, 'மஹாகாளேஸ்வர் கோவிலுக்குச் சென்றபோது ராகுல் பூணூல் அணிந்திருந்தார் என்றால் அது என்ன வகையான பூணூல்? அவர் என்ன கோத்திரம்?"  என்று கேள்வி எழுப்பியுள்ளார். 

காலையில் ராகுல் பூணூல் அணிந்து சென்றதும், அதைத் தொடர்ந்து பாஜகவின் இந்த கேள்வியும் புதிய சர்ச்சையினை ஏற்படுத்தியுள்ளது.    
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments