இந்தியா

ராமர் கோவிலைக் கட்ட சட்டம் இயற்றுங்கள்: ஆர்எஸ்எஸ் வலியுறுத்தல் 

அயோத்தியில் ராமர் கோவிலைக் கட்ட சட்டம் இயற்றுங்கள் என்று வலியுறுத்தி ஆர்எஸ்எஸ் அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது. 

DIN

புது தில்லி: அயோத்தியில் ராமர் கோவிலைக் கட்ட சட்டம் இயற்றுங்கள் என்று வலியுறுத்தி ஆர்எஸ்எஸ் அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது. 

அயோத்தியில் ராமர் கோவில் தொடர்பான வழக்கை அடுத்த ஆண்டு ஜனவரி மாதம்தான் விசாரிக்க முடியும் என்று கூறி உச்ச நீதிமன்றம் சமீபத்தில் ஒத்தி வைத்தது. 

இந்நிலையில் அயோத்தியில் ராமர் கோவிலைக் கட்ட சட்டம் இயற்றுங்கள் என்று வலியுறுத்தி ஆர்எஸ்எஸ் அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.  அந்த அறிக்கையில், 'அயோத்தியில் ராமர் கோவிலைக் கட்ட மத்திய அரசு முதலில் நிலத்தினைக் கையகப்படுத்த வேண்டும். பின்னர் அதற்காக பாராளுமன்றத்தில் சட்டம் இயற்றுங்கள்' என்று கூறப்பட்டுள்ளது. 

முன்னதாக நாகபுரியில் நடைபெற்ற விஜயதசமி விழாவில் கலந்து கொண்டு பேசிய ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத், அயோத்தியில் ராமர் கோவில் கட்ட சட்டம் இயற்ற வேண்டும் என்று பேசியிருந்தார். 

அதேபோல் பா.ஜனதாவின் கூட்டணி கட்சியான சிவசேனாவும் இதே கோரிக்கையையே முன்வைத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விடுபட்டவர்களுக்கு டிசம்பர் முதல் மகளிர் உரிமைத்தொகை: துணை முதல்வர் உதயநிதி

தமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்பநிலை அதிகரிக்கும்!

ஆப்கன் நிலநடுக்கம்: 20க்கும் மேற்பட்டோர் பலி, 320 பேர் காயம்

கடல் கடந்து வந்து காதலரை கரம் பிடித்த ஜெர்மன் பெண்! தமிழ் முறைப்படி திருமணம்!!

கரூர் வழக்கு: கரூர் நீதிமன்ற நீதிபதியுடன் சிபிஐ அதிகாரிகள் சந்திப்பு!

SCROLL FOR NEXT