இந்தியா

எல்லையில் அத்துமீறல்: ராணுவ வீரர் காயம்

தினமணி

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், ரஜௌரி மாவட்டத்தில் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதியில் அத்துமீறி பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியதில் இந்திய ராணுவ வீரர் ஒருவர் காயமடைந்தார்.
 இதுதொடர்பாக ராணுவ செய்தித்தொடர்பாளர் கூறியதாவது:
 நௌஷெரா பகுதியில் இந்திய பாதுகாப்புச் சாவடிகள் இருந்த பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் சனிக்கிழமை 10.30 மணிக்கு துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில், ராணுவ வீரர் ஒருவர் காயமடைந்தார். உதம்பூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவர் நலமாக உள்ளார் என்று அந்த செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார்.
 
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தற்காலிகமாக நிறுத்தம்

பைக்குகளுக்கு தீ வைத்தவா் கைது

காவல் நிலையத்தில் மனைவி புகாா்: கணவா் தற்கொலை

கல்லலில் மியோவாக்கி முறையில் மரக்கன்று நடும் விழா

மணல் கடத்தலை தடுக்கக் கோரி பாமக மனு

SCROLL FOR NEXT