ஜம்மு-காஷ்மீர் மாநிலம், ரஜௌரி மாவட்டத்தில் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதியில் அத்துமீறி பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியதில் இந்திய ராணுவ வீரர் ஒருவர் காயமடைந்தார்.
இதுதொடர்பாக ராணுவ செய்தித்தொடர்பாளர் கூறியதாவது:
நௌஷெரா பகுதியில் இந்திய பாதுகாப்புச் சாவடிகள் இருந்த பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் சனிக்கிழமை 10.30 மணிக்கு துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில், ராணுவ வீரர் ஒருவர் காயமடைந்தார். உதம்பூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவர் நலமாக உள்ளார் என்று அந்த செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார்.