இந்தியா

புவி கண்காணிப்புக்கான பி.எஸ்.எல்.வி.-சி 42 ராக்கெட்டின் கவுண்ட் டவுன் இன்று தொடங்கியது

DIN

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதிஷ் தவண் விண்வெளி ஆய்வு மையத்தின் முதல் ஏவு தளத்திலிருந்து, நாளை (ஞாயிற்றுக்கிழமை) விண்ணில் செலுத்தப்படவுள்ள ராக்கெட்டின் கவுண்ட் டவுன் இன்று தொடங்கியது.  

பிரிட்டனைச் சேர்ந்த சுர்ரே செயற்கைக்கோள் தொழில்நுட்ப நிறுவனத்துக்குச் சொந்தமான -நோவா எஸ்.ஏ.ஆர். மற்றும் எஸ்1-4 என்ற இந்த இரண்டு செயற்கைக்கோள்களையும் வணிக ரீதியில் இந்திய விண்வெளி ஆரய்ச்சி மையம் (இஸ்ரோ) விண்ணில் ஏவுகிறது. 

இதில் 445 கிலோ எடைகொண்ட நோவா எஸ்.ஏ.ஆர். செயற்கைக்கோள், இயற்கைப் பேரிடர், வெள்ள பாதிப்பு, பனிப் படலம் ஆகியவற்றைக் கண்காணிப்பதற்காக அனுப்பப்படுகிறது. 444 கிலோ எடைகொண்ட எஸ்1-4 செயற்கைக்கோள், பேரழிவு மேலாண்மை, சுற்றுச்சூழல் கண்காணிப்பு உளளிட்ட பணிக்காக அனுப்பப்படுகிறது.

இதற்கான கவுண்ட் டவுன் இன்று பிற்பகல் 1.08 மணிக்கு தொடங்கியது. இந்நிலையில், இந்த ராக்கெட் நாளை இரவு 10.07 மணிக்கு விண்ணில் செலுத்தப்படுகிறது. 

44 ஆவது ராக்கெட்: இந்த இரண்டு செயற்கைக்கோள்களும் பி.எஸ்.எல்.வி.-சி42 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டு, பூமியிலிருந்து 583 கி.மீ. தொலைவில் புவி சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட உள்ளது. இது இஸ்ரோ சார்பில் அனுப்பப்படும் 44 ஆவது பி.எஸ்.எல்.வி. ராக்கெட் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தைவானில் 4.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்!

மெட்ரோ ரயிலில் ஏப்ரல் மாதத்தில் 80.87 லட்சம் பேர் பயணம்!

வட கொரிய அதிபரின் ‘அந்தப்புரம்’? ஆண்டுக்கு 25 அழகிய பெண்கள்!

பணத்தைவிட நல்ல கதைகளே முக்கியம்: நடிகை ஈஷா ரெப்பா அதிரடி!

சோளிங்கர் கோயிலுக்கு மலையேறிச் சென்ற பக்தர் உயிரிழப்பு!

SCROLL FOR NEXT