இந்தியா

ராகுலுடனான கருத்து வேறுபாடு அரசியல் ரீதியானதுதான்; தனிப்பட்டது அல்ல : ராஜ்நாத்

IANS


லக்னௌ: காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடனான பாஜகவின் கருத்து வேறுபாடு அரசியல் ரீதியானதேத் தவிர, சொந்த விஷயம் அல்ல என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

லக்னௌவில் இன்று நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ராஜ்நாத் சிங், பாஜக எப்போதும் மாற்று அரசியல் கருத்துகளையும், கொள்கைகளையும் மதிக்கவேச் செய்யும், எப்போதுமே அதனை தனிநபர் விஷயமாக எண்ணாது என்று தெரிவித்தார்.

மக்களவைத் தேர்தலை எதிர்கொள்ளவிருக்கும் நிலையில், ராகுல் காந்தியின் திருக்கோயில் பயணங்கள் அதிகரித்திருப்பது குறித்து கேட்டதற்கு, ஒருவர் எப்போதுமே அரசியலை முன்னேற்றப்பாதையில் கொண்டு செல்ல வேண்டும், எல்லோருடனும், எல்லோரின் முன்னேற்றத்துக்காகவும் என்பதே கொள்கையாக இருக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெப்ப அலை: தொழிலாளா்கள் பாதிக்காத வகையில் பணி நேரம்

இன்று நல்ல நாள்!

12 ராசிக்குமான தினப்பலன்!

திருப்பருத்திக்குன்றத்தில் மகாவீரா் ஜெயந்தி

திமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT