தமிழகத்தைச் சேர்ந்த டேபிள் டென்னிஸ் வீரர் ஜி.சத்யனுக்கு அர்ஜுனா விருதை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் செவ்வாய்க்கிழமை வழங்கினார். அதே நேரத்தில் கிரிக்கெட் வீரர் கோலி, பளுதூக்கும் வீராங்கனை மீராபாய் சானு ஆகியோருக்கு கேல்ரத்னா விருது வழங்கப்பட்டது.
சென்னையில் கடந்த 1993-இல் பிறந்த ஜி.சத்யன், உலக தரவரிசையில் 40-ஆவது இடத்தில் உள்ளார். கடந்த 2011-இல் உலக ஜூனியர் சாம்பியன் போட்டியில் வெண்கலம் வென்ற அணியில் சத்யனும் இடம் பெற்றிருந்தார். கடந்த 2016-இல் பெல்ஜியம் ஓபன் போட்டி, பல்வேறு ஐடிடிஎஃப் போட்டிகளில் பட்டம் வென்றுள்ள சத்யன், கோல்ட்கோல்ட் காமன்வெல்த் போட்டியில் ஒரு தங்கம், 1 வெள்ளி, வெண்கலம் ஆகிய பதக்கங்களை வென்றுள்ளார்.
தற்போது ஜெர்மனியின் தலைசிறந்த கிளப்புகளில் ஒன்றான ஏஎஸ்வி ரன்வெட்டர்பேட்ச் அணிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
சீனிவாச ராவ் (பயிற்சியாளர்): துரோணாச்சார்யா விருது பெற்றுள்ள சீனிவாசராவ் ஆந்திரத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும், தமிழகத்தில் குடியேறிவிட்டார். கடந்த 1983-ஆம் ஆண்டு முதல் டேபிள்டென்னிஸ் விளையாட்டின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகித்துள்ள இவர், பிரபல வீரர் சரத்கமலின் தந்தை ஆவார்.
இவரது கடுமையான பயிற்சியின் கீழ் சேதன் பபூர், எஸ்.ராமன், கே.ஷாமினி, என்.ஆர்.இந்து உள்ளிட்ட பிரபல வீரர், வீராங்கனைகள் சாம்பியன்களாக உருவாகினர்.