முகப்பு
இந்தியா

ராகுல் வயநாடு பேரணியில் விபத்து: 3 பத்திரிகையாளர்கள் காயம்

ராகுல் பேரணியின் போது பாரிகேட் உடைந்து விபத்துக்குள்ளானதில் 3 பத்திரிகையாளர்கள் படுகாயமடைந்தனர்.

Updated On : 4 ஏப்ரல், 2019 at 3:55 PM
பகிர்:

வயநாடு வேட்பு மனு தாக்கலுக்கு முன்பும், அடுத்தும் தங்கையும், உத்தரப்பிரதேச காங்கிரஸ் செயலாளருமான பிரியங்கா வதேரா மற்றும் ஆயிரக்கணக்கான காங்கிரஸ் தொண்டர்களுடன் காங்கிரஸ் தலைவர் ராகுல் பேரணியாக சென்றார். 

அப்போது பாரிகேட் உடைந்து விபத்துக்குள்ளானதில் 3 பத்திரிகையாளர்கள் படுகாயமடைந்தனர். இதையடுத்து அவர்கள் 3 பேரும் சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

முன்னதாக, கேரள மாநிலம், வயநாடு மக்களவைத் தொகுதியில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல், வியாழக்கிழமை (ஏப்.4) தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

Advertisement

2019 மக்களவைத் தேர்தலில் முதன்முறையாக உத்தரப்பிரதேசத்தின் அமேதி மட்டுமல்லாது கேரளாவின் வயநாடு தொகுதியிலும் ராகுல் போட்டியிடவுள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.