இந்தியா

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இந்திய தேர்தல் ஆணையத்தை 2 நாள் சிறை வைப்பேன்: அம்பேத்கர் பேரன் கொதிப்பு

தேர்தல் ஆணையத்தை சிறை வைப்பேன் என்று  பிரகாஷ் அம்பேத்கர் கூறிய கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

ANI

இந்திய தேர்தல் ஆணையத்தை சிறை வைப்பேன் என்று பாரிபா பகுஜன் மகாசங்க கட்சித் தலைவரும், அம்பேத்கர் பேரனுமான பிரகாஷ் அம்பேத்கர் கூறிய கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மஹராஷ்டிர மாநிலம் யவத்மல் பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் பிரகாஷ் அம்பேத்கர் பேசியதாவது:

ஜனநாயக முறையில், சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு புல்வாமா தாக்குதல் குறித்து பேச சுதந்திரம் உள்ளபோதும், அதுகுறித்து பேசக்கூடாது என்று உத்தரவுகள் வருகின்றன. எங்கள் கட்சி மட்டும் ஆட்சிக்கு வந்தால், நாங்கள் இந்திய தேர்தல் ஆணையத்தை சும்மா விட மாட்டோம். இந்திய தேர்தல் ஆணையத்தை நிச்சயமாக இரண்டு நாட்களுக்கு சிறை வைப்போம்.

இந்திய தேர்தல் ஆணையம் பாரபட்சமின்றி செயல்படுகிறது என்று யாரும் நினைக்க வேண்டாம். அது பாஜக-வுக்கு ஆதரவாக மட்டுமே செயல்படுகிறது என்று தெரிவித்தார்.

பிரகாஷ் அம்பேத்கர், மஹாராஷ்டிர மாநிலத்தின் சோலாபூர் மற்றும் அகோலா ஆகிய இரு தொகுதிகளிலிருந்து மக்களவைத் தேர்தலில் போட்டியிடவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அன்னிய நிதி வெளியேற்றத்தால் சென்செக்ஸ் 519 புள்ளிகள் சரிவுடன் நிறைவு!

சரும அழகைக் கெடுக்கும் பானங்கள்! பளபளப்பான சருமத்திற்கு இதைச் செய்யுங்கள்!

தவறுதலாக 43 ஆண்டுகள் சிறை! இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரை நாடு கடத்தத் தடை

அடியே, அலையே! பராசக்தி முதல் பாடல் புரோமோ!

ஹிந்துஜா குழுமத் தலைவர் கோபிசந்த் காலமானார்

SCROLL FOR NEXT