இந்தியா

முஸ்லிம் மக்களே எனக்கு வாக்களியுங்கள்.. இல்லையென்றால்: மிரட்டும் அரசியல்வாதி

IANS

லக்னௌ: மத்திய இணை அமைச்சர் மேனகா காந்தி உத்தரப்பிரதேச மாநிலம் சுல்தான்புரில் இன்று தனது தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கியுள்ளார். முதல் நாளே அவரது பேச்சு சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

உங்களுக்கு வேலை வாய்ப்பு வேண்டும் என்றால்.. முஸ்லிம் மக்களே நீங்கள் எனக்குத்தான் வாக்களிக்க வேண்டும் என்று மேனகா காந்தி கூறியுள்ளார்.

துரப் கனி கிராமத்தில் இன்று தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்றுப் பேசிய மேனகா காந்தி, எனக்கு வாக்களிக்கவில்லை என்றால் முஸ்லிம்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க மாட்டேன் என்றும் அவர் நேரடியாகவே முஸ்லிம் வாக்காளர்களை மிரட்டும் தொணியில் பேசியுள்ளார்.

வேலை வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்குமாறு கேட்கும் முஸ்லிம் மக்களிடம் நான் சொல்வது இதுதான். ஒரு பக்கம் கொடுத்து, மறுபக்கம் எடுத்துக் கொள்ளும் ஒப்பந்தம். இதில் வேலைதான் டீல் என்கிறார் மேனகா காந்தி.

நான் உங்கள் ஆதரவு இல்லாமலேயே தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்று வந்து, உங்களுக்காக பணி செய்து கொண்டே இருக்க முடியாது. நான் தொடர்ந்து தேர்தல்களில் வெற்றி பெற்றுக் கொண்டுதான் இருக்கிறேன். ஆனால் உங்களுக்குத்தான் நான் தேவைப்படுகிறேன். இது உங்களுக்கான வாய்ப்பு, எனக்கு ஆதரவு அளியுங்கள் என்றும் மேனகா காந்தி தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆர்சிபி வீரர்களுக்கு கைகொடுக்காமல் சென்ற தோனி: வெடித்த சர்ச்சை

ஆம் ஆத்மி போராட்டம்: தில்லியில் 144 தடை!

சாம்ராஜ்யங்கள் சரியலாம்! சாகாவரம் கொண்ட படைத்தலைவன் மடிவதில்லை! தோனி குறித்து டி ஜெயகுமார்

இந்தியாவின் அதிக வரி விதிப்பால் வர்த்தக உறவைத் துண்டித்தோம்: பாகிஸ்தான்

ஸ்காட்லாந்து அணி சீருடையில் கர்நாடகத்தின் ‘நந்தினி’ பால் நிறுவன குறியீடு

SCROLL FOR NEXT