ராகுல் இங்குதான் பிறந்தார், வளர்ந்தார்: பிரியங்கா வதேரா
காங்கிரஸ் தலைவர் ராகுல், இந்தியாவில் தான் பிறந்து வளர்ந்ததாக அவரது சகோதரி பிரியங்கா வதேரா செவ்வாய்கிழமை தெரிவித்தார்.
காங்கிரஸ் தலைவர் ராகுல், இந்தியாவில் தான் பிறந்து வளர்ந்ததாக அவரது சகோதரி பிரியங்கா வதேரா செவ்வாய்கிழமை தெரிவித்தார்.
இதுதொடர்பாக அமேதியில் போட்டியிடும் காங்கிரஸ் தலைவர் ராகுலுக்கு ஆதரவாக பிரசாரம் செய்து வரும் அவரது சகோதரியும், உத்தரப்பிரதேச காங்கிரஸ் செயலாளருமான பிரியங்கா வதேரா கூறியதாவது:
ராகுல் மீதான குடியுரிமை சர்ச்சை மிகவும் தவறானது. ராகுல் இந்தியாவில் தான் பிறந்தார், வளர்ந்தார். எனவே அவர் இந்தியர் என்பது ஒட்டுமொத்த இந்திய மக்களுக்கும் தெரியும். ராகுல் மீதான இந்த தேவையற்ற சர்ச்சை வெறும் நாடகம்.
Advertisement
எனவே அவர் குடியுரிமை மீதான சர்ச்சை தேவையற்றது. மக்களின் கவனத்தை திசை திருப்பவே இதுபோன்ற தேவையற்ற சர்ச்சைகள் ஏற்படுத்தப்படுவதாக குற்றம்சாட்டினார்.