இந்தியா

என் மீது எந்த குற்றச்சாட்டு இல்லை என ப. சிதம்பரம் பேட்டி

DIN

ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் முன்ஜாமீன் கோரி தில்லி உயர்நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், ப. சிதம்பரத்தின் முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

முன்ஜாமீன் மனுவை தில்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்ததையடுத்து நேற்று மாலை, தில்லியில் உள்ள ப.சிதம்பரத்தின் வீட்டுக்குள் சி.பி.ஐ. அதிகாரிகள் விரைந்தனர். ஆனால் ப.சிதம்பரம் அங்கு இல்லாததால் ஏமாற்றத்துடன் திரும்பினர். 

இந்நிலையில் தில்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்தில் முன்னாள் நிதி அமைச்சர் ப.சிகம்பரம் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது

  • வழக்கில் என் மீது சிபிஐ, அமலாக்கத்துறை எந்த குற்றப்பத்திரிகையும்  தாக்கல் செய்யவில்லை
  • ஐ.என்.எக்ஸ். வழக்கில் எனக்கு எதிராக எந்த குற்றச்சாட்டும் பதிவு செய்யப்படவில்லை
  • சுதந்திரத்தை பெறவும் போராடினோம்; சுதந்திரத்தை காக்கவும் போராடி வருகிறோம்
  • ஜனநாயகம், சுதநதிரத்தில் நம்பிக்கை கொண்டுள்ளேன்
  • எனக்கு எதிராக பொய் பிரசாரம் செய்யப்பட்டு வருகிறது
  • ஐ.என்.எக்ஸ். வழக்கில் என் மீதும் என் குடும்பத்தினர் மீதும் எந்த முதல் தகவல் அறிக்கையும் பதிவு செய்யப்படவில்லை
  • கடந்த 24 மணி நேரத்தில் பல்வேறு குழுப்பங்கள் நடைபெற்று உள்ளன
  • அரசியல் சட்டப்பிரிவு 21 குடிமகனின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது
  • உச்சநீதிமன்றத்தின் உத்தரவை தலைவணங்கி ஏற்கிறேன். அதே போல் தனிநபர் சுதந்திரத்தை நீதிமன்றம் காக்க வேண்டும்

.சிதம்பரம் பேட்டி அளித்துள்ள நிலையில், காங்கிரஸ் அலுவலகத்துக்கு சிபிஐ அதிகாரிகள் வருகை தந்து உள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: முதல்-10 இடங்களில் பரமத்தி..!

நக்சலைட்டுகள் பதுக்கியிருந்த வெடிகுண்டுகள் பறிமுதல்

நளதமயந்தி தொடரிலிருந்து நீக்கப்பட்ட பிரியங்கா....புதிய நாயகி யார்?

எம்.எஸ்.தோனியின் சாதனையை முறியடித்த ரவீந்திர ஜடேஜா!

‘இது மார்பிங்’ சமந்தாவுக்கு ரசிகர்கள் ஆதரவு!

SCROLL FOR NEXT