இந்தியா

ஆறு விமான நிலையங்களில் ஏர் இந்தியா விமானங்களுக்கு எரிபொருள் வழங்குதல் நிறுத்தம்: ஏன் தெரியுமா? 

எரிபொருள் வழங்கியதற்கான கட்டணத்தை செலுத்தாத காரணத்தால் ஆறு விமான நிலையங்களில் ஏர் இந்தியா விமானங்களுக்கு எரிபொருள் வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது.

IANS

புது தில்லி: எரிபொருள் வழங்கியதற்கான கட்டணத்தை செலுத்தாத காரணத்தால் ஆறு விமான நிலையங்களில் ஏர் இந்தியா விமானங்களுக்கு எரிபொருள் வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக இந்தியன் ஆயில் நிறுவனத்தின் தலைமையிலான எரிபொருள் உற்பத்தி நிறுவனங்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ள தகவலின் படி, முன்னரே எரிபொருள் வழங்கியதற்கான கட்டணத்தை செலுத்தாத காரணத்தால் ராஞ்சி, மொஹாலி, பாட்னா, விசாகப்பட்டினம், புணே மற்றும் கொச்சின் ஆகிய ஆறு விமான நிலையங்களில் ஏர் இந்தியா விமானங்களுக்கு எரிபொருள் வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

இதற்கு பதிலளித்த ஏர் இந்தியா நிறுவன அதிகாரி ஒருவர், இந்த பிரச்சினையைத் தீர்க்க எரிபொருள் உற்பத்தி நிறுவனங்கள் கூட்டமைப்புடன் பேச்சுவார்தைநடத்தப்பட்டு வருகிறது. ஏர் இந்தியா நிறுவனமானது ரூ.60 கோடியை மொத்தமாக செலுத்தியுள்ளது என்று தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இருவேறு இடங்களில் நிகழ்ந்த சாலை விபத்துகளில் 2 போ் உயிரிழப்பு

நாகா்கோவிலில் நாளை மின்சாரம் நிறுத்தம்

நாளைய மின்தடை: மேமாத்தூா், பரசலூா்

தென்னலகுடியில் சுரங்கப் பாதை அமைக்கும் பணிகள் தீவிரம்

ராஜஸ்தான் மண்பாண்டங்களை வாங்க மக்கள் ஆா்வம்!

SCROLL FOR NEXT