முகப்பு
இந்தியா

மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க அரசு உடனடி நடவடிக்கை எடுக்க ராகுல் வலியுறுத்தல்

மத்திய கிழக்கில் பதற்றமான சூழல்: இந்தியர்களின் பாதுகாப்பை அரசு உறுதி செய்ய ராகுல் காந்தி வலியுறுத்தல்

Updated On : 28 பிப்ரவரி, 2026 at 12:51 PM
மத்திய கிழக்கில் பதற்றமான சூழல்
பகிர்:

மத்திய கிழக்கில் வாழும் இந்தியர்களைப் பாதுகாக்க அரசு உரிய நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.

அமெரிக்க, இஸ்ரேல்- ஈரான் இடையேயான ராணுவ தாக்குதல்கள் தொடங்கியதையடுத்து மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் அசாதாரண சூழல் நிலவுகிறது. குறிப்பாக, இஸ்ரேலிலும் ஈரானிலும் அதன் அண்டை நாடுகளிலும் மக்கள் பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருக்கிறது. இந்த நிலையில், அப்பகுதிகளிலுள்ள இந்திய குடிமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய மத்திய அரசை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து, அவர் தமது எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘அமெரிக்க-இஸ்ரேல் மற்றும் ஈரானுக்கும் இடையேயான தாக்குதல்கள் அதிகரிப்பது மிகுந்த வருத்தமளிக்கிறது. இந்நிலையில், மத்திய கிழக்கில் உள்ள ஒவ்வொரு இந்திய குடிமக்களின் பாதுகாப்பையும் உறுதி செய்வதே நமது தலையாயக் கடமையாகும். அதற்குத் தேவையான ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு இந்திய அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

summary

safety and security of every Indian citizen across the Middle East must be our highest priority. I urge the Government of India to take immediate and proactive measures to safeguard our people - Rahul Gandhi

முழு கட்டுரையைப் படிக்க →