இந்தியா

காஷ்மீர் இந்தியாவின் உள்நாட்டு விவகாரம்: ராகுல் காந்தி விளக்கம்

காஷ்மீர் விவகாரம் இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விளக்கம் அளித்துள்ளார். 

DIN


புதுதில்லி: காஷ்மீர் விவகாரம் இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விளக்கம் அளித்துள்ளார். 

இதுதொடர்பாக ராகுல் இன்று தனது டிவிட்டர் பக்க பதிவில், பல விவகாரங்களில் அரசின் நிலைப்பாட்டில் என்னால் நான் உடன்படவில்லை. ஆனால், காஷ்மீர் இந்தியாவின் உள்நாட்டு விவகாரம். இதில் பாகிஸ்தான் உட்பட எந்த நாடுகளும் இதில் தலையிடுவதற்கு அதிகாரம் இல்லை என்பதில் நாங்கள் தெளிவாக உள்ளோம்.

ஜம்மு காஷ்மீரில் ஏற்படும் வன்முறைகளுக்கு பாகிஸ்தானே காரணம். காஷ்மீரில் நடக்கும் வன்முறைகளை பாகிஸ்தான் தூண்டி விடுவதுடன், வன்முறையில் ஈடுபடுவோரை ஆதரிக்கிறது. உலகம் முழுவதும் பயங்கரவாதத்தை ஆதரிக்கும் முக்கிய நாடாக இருக்கும் பாகிஸ்தான், காஷ்மீரிலும் வன்முறையை ஆதரிக்கிறது என தெரிவித்துள்ளார். 

காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததன் மூலம் பயங்கரவாதத்தை மோடி அரசு ஊக்குவிக்கிறது என ராகுல் தெரிவித்திருந்தது குறிப்பிட்டத்தக்கது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் வெல்லும் வாய்ப்பை சீனாவிடம் நழுவவிட்ட இந்தியா! சாத்விக், சிராக் இணைக்கு வெண்கலம்!

இதற்காக ஒரு மாதத்துக்கும் மேலாக காத்திருந்தோம்; இலங்கை தொடருக்கு முன்பாக ஹர்மன்பிரீத் உற்சாகம்!

மதச்சார்பின்மை சொல்லைக் கேட்டாலே வேப்பங்காயாக கசக்கிறது பாஜகவுக்கு: முதல்வர் ஸ்டாலின்

வட மாநிலங்களில் காற்று மாசு: மலைப் பிரதேசங்களுக்குப் படையெடுத்த சுற்றுலாப் பயணிகள்!

நெல்லையில் பொருநை அருங்காட்சியகம் திறப்பு

SCROLL FOR NEXT