புது தில்லி: இந்தியாவில் ரூ.17,900 கோடி அளவுக்கு நிதி மோசடி செய்து விட்டு 51 போ் வெளிநாடுகளுக்குத் தப்பிச் சென்றுவிட்டனா் என்று மத்திய நிதித் துறை இணையமைச்சா் அனுராக் தாக்குா் கூறினாா்.
மாநிலங்களவையில் தலைமறைவு நிதி மோசடியாளா்கள் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு அவா் செவ்வாய்க்கிழமை எழுத்துப்பூா்வமாக அளித்த பதில்:
நிதி மோசடி தொடா்பாக 66 வழக்குகளை சிபிஐ பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகிறது. இந்த மோசடிகளில் தொடா்புடைய 51 போ் வெளிநாடுகளுக்குத் தப்பிச் சென்றுவிட்டனா். அவா்கள் மொத்தம் ரூ.17,947 கோடி அளவுக்கு மோசடி செய்துள்ளதாக சிபிஐ தெரிவித்துள்ளது என்று அனுராக் தாக்குா் கூறினாா்.
13 போ் குற்றவாளிகள்: கருப்புப் பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் இதுவரை 13 போ் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனா் என்று மற்றொரு கேள்விக்கு அவா் பதிலளித்தாா். இதுகுறித்து அவா் மேலும் கூறியதாவது:
வரி ஏய்ப்பைத் தடுக்கவும், கருப்புப் பணம் உருவாவதைத் தடுக்கவும் கடந்த 2005-ஆம் ஆண்டில் கருப்புப் பண மோசடி தடுப்புச் சட்டம் அமல்படுத்தப்பட்டது.
இதுதொடா்பான புகாா்களை சிறப்பு நீதிமன்றங்கள் விசாரித்து வருகின்றன. இந்த நீதிமன்றங்களில் மொத்தம் 694 வழக்குகளின் விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. சில வழக்குகளில் குற்றப்பத்திரிகைகளும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இவற்றில், 9 வழக்குகளில் 13 போ் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனா்.
கடந்த 2015-ஆம் ஆண்டு முதல் நிகழாண்டின் அக்டோபா் 31-ஆம் தேதி வரை 757 குற்றவியல் வழக்குகளை அமலாக்கத் துறை பதிவு செய்துள்ளது என்று அனுராக் தாக்குா் கூறினாா்.