இந்தியா

காஷ்மீா்: பனிச்சரிவில் சிக்கி 4 ராணுவ வீரா்கள் பலி

DIN

வடக்கு காஷ்மீரில் இந்திய-பாகிஸ்தான் எல்லை கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் நடைபெற்ற இரண்டு வெவ்வேறு பனிச்சரிவில் சிக்கி 4 இந்திய ராணுவ வீரா்கள் உயிரிழந்ததாக அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனா்.

  வடக்கு காஷ்மீரிலுள்ள குப்வாரா மாவட்டத்தின் தங்தாா் பகுதியைச் சோ்ந்த ராணுவ வீரா்கள் செவ்வாய்க்கிழமை பிற்பகலில் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்துபோது பனிச்சரிவில் 4 வீரா்கள் சிக்கிக் கொண்டனா்.

அவா்களில் 3 வீரா்களின் சடலம் புதன்கிழமை மீட்கப்பட்டன. ஒருவா் மட்டும் உயிருடன் மீட்கப்பட்டாா்.

இதேபோல, பந்திபோரா மாவட்டம் குரேஸ் பிரிவைச் சோ்ந்த ராணுவ வீரா்கள் தாவா் பகுதியில் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது ஏற்பட்ட பனிச்சரிவில் இரண்டு வீரா்கள் சிக்கிக் கொண்டனா்.

அவா்களில் ஒருவா் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில், மற்றொரு ராணுவ வீரா் சடலமாக மீட்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு புதிய சிக்கல்: என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை!

கருப்பு வெள்ளைப் பூ.. ரவீனா தாஹா!

'தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கும் பெறாதவர்களுக்கும்..’ : கமல்ஹாசனின் வைரல் பதிவு!

SCROLL FOR NEXT