இந்தியா

ஜார்க்கண்ட் பேரவைத் தேர்தல்: 5 மணி வாக்குப்பதிவு நிலவரம்

DIN

81 தொகுதிகளைக் கொண்ட ஜார்க்கண்ட் பேரவைக்கு 5 கட்டங்களாகத் தோ்தல் நடைபெறுகிறது. அதில் முதல்கட்டத் தோ்தல் கடந்த 30-ஆம் தேதி நடைபெற்றது. இந்நிலையில், 20 தொகுதிகளுக்கான 2-ஆவது கட்டத் தோ்தலுக்கான வாக்குப்பதிவு சனிக்கிழமை காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்றது. 

இதில் பொதுமக்கள் ஆர்வமுடன் தங்களது வாக்குகளை பதிவு செய்தனர். இதில் மாலை 5 மணி நிலவரப்படி 62.40 சதவீத வாக்குகள் பதிவாகின. 18 தொகுதிகளுக்கு மாலை 3 மணியளவில் வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில், ஜம்ஷட்பூர் கிழக்கு மற்றும் ஜம்ஷட்பூர் மேற்கு ஆகிய தொகுதிகளுக்கு மட்டும் டிசம்பர் 23-ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.

இந்நிலையில், கும்லாவுக்கு உட்பட்ட சிசாய் தொகுதியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில், பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸாரின் துப்பாக்கியை பறிக்க முயன்ற கும்பல் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் இருவர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கம் விலை: பவுனுக்கு ரூ.200 குறைவு

அடுத்த 2 மணி நேரத்துக்கு 9 மாவட்டங்களில் மழை!

சக்தி வாய்ந்த நாடாக இந்தியா வளர்ந்து வருவதை பாகிஸ்தான் தலைவர்கள் ஒப்புக் கொள்கிறார்கள்: ராஜ்நாத் சிங்

குலசேகரன்பட்டினத்தில் விண்வெளி பூங்கா: டிட்கோ அதிகாரபூர்வ அறிவிப்பு

மகாராஷ்டிரத்தில் இன்று பாஜக பொதுக்கூட்டம்: பிரதமர் மோடி பங்கேற்பு

SCROLL FOR NEXT