முகப்பு
இந்தியா

அஸ்ஸாமில் பாஜக அமைதிப் பேரணி

புதிய குடியுரிமைச் சட்டத்திற்கு எதிரான போராட்டங்கள் அஸாமின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து நடந்து கொண்டிருந்த போதும்

Updated On : 31 ஜனவரி, 2024 at 1:37 PM
பகிர்:

குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டங்கள் அஸ்ஸாமின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து நடந்து கொண்டிருந்த போதும்,  முதல்வர் சர்பானந்தா சோனோவால் தலைமையில், வெள்ளிக்கிழமை அமைதிப் பேரணியை  பாஜக நடத்தியது. 

தலைநகர் திஸ்பூரிலிருந்து 70 கி.மீ தூரத்திலுள்ள நல்பரியில் நடந்த பிரமாண்டமான பேரணியில், சோனோவால் மற்றும் அஸ்ஸாம் நிதியமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதற்கிடையில், அனைத்து அஸ்ஸாம் மாணவர் சங்கம் (ஏஏஎஸ்யூ) நல்பாரி நகரில் "பஜ்ரானினாட்" என்ற உண்ணாவிரதப் போராட்டத்தைத் நடத்தியது.

வழக்குரைஞர்கள்,  அஸ்ஸாமின் "மொழி மற்றும் கலாசாரத்திற்கு" விரோதமானது என்ற கோஷத்துடன் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை எதிர்த்து பேரணி நடத்தினர். சி.ஜே.எம் நீதிமன்ற வளாகத்திலிருந்து தொடங்கி இந்த பேரணி நடைபெற்றது. இதில் பங்கேற்றவர்கள் இந்தச் சட்டத்தை ஏற்க மாட்டோம், அதை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.

முழு கட்டுரையைப் படிக்க →