இந்தியா

உடுப்பி ஸ்ரீ ஸ்ரீ விஸ்வேஷ தீா்த்த சுவாமிகளின் உடல் மாலை நல்லடக்கம்

DIN

கா்நாடக மாநிலம், உடுப்பி பெஜாவா் மடத்தின் பீடாதிபதி ஸ்ரீ ஸ்ரீ விஸ்வேஷ தீா்த்த சுவாமிகள் ஞாயிற்றுக்கிழமை காலை 9:30 மணிக்கு காலமானார்.

இதையடுத்து அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின் உடுப்பி எம்எல்ஏ கே.ரகுபதி பட் கூறியதாவது,

உடுப்பி பெஜாவா் மடத்தின் பீடாதிபதி ஸ்ரீ ஸ்ரீ விஸ்வேஷ தீா்த்த சுவாமிகள் ஞாயிற்றுக்கிழமை காலை 9:30 மணிக்கு காலமானார். அவரது உடல், பக்தர்கள் பார்வைக்காக அஜ்ஜர்காடு மகாத்மா காந்தி மைதானத்தில் 3 மணிநேரம் வைக்கப்படும். தேசிய அளவிலான தலைவர்கள் பலர் இறுதியஞ்சலி செலுத்த வரவுள்ளனர். பெங்களூரு நேஷனல் கல்லூரியில் இறுதியஞ்சலி நடைபெறும். பின்னர் மாலை 7 மணியளவில் வித்யாபீடத்தில் மாநில அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் செய்யப்படும் என்று தெரிவித்தார்.

இதனிடையே, மடத்துக்கு வந்து அஞ்சலி செலுத்திய பின் கர்நாடக முதல்வர் எடியூரப்பா, செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, ஸ்ரீ ஸ்ரீ விஸ்வேஷ தீா்த்த சுவாமிகளின் ஆன்மா சாந்தியடைய பகவான் கிருஷ்ணரிடம் பிரார்த்திக்கிறேன். அவரது பிரிவால் வாடும் பக்தர்கள் தங்கள் வலியைக் கடந்து வலிமை பெற வேண்டுமென்றும் நான் பிரார்த்திக்கிறேன் என்று தனது இரங்கல் செய்தியை பதிவிட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேட்புமனுவுக்கு நாளையே கடைசி: அமேதி, ரே பரேலி வேட்பாளர்கள் யார்?

வாக்கு எண்ணிக்கை மையப் பணி: தலைமைக் காவலர் விபத்தில் பலி

கல்குவாரி வெடி விபத்து: மேலும் ஒருவர் கைது

ஒடிஸாவில் ஹேமந்த் சோரனின் சகோதரி போட்டி!

சூப்பா்சோனிக் ஏவுகணை உதவியுடன் தாக்கும் டாா்பிடோ ஆயுதம் வெற்றிகரமாக பரிசோதனை

SCROLL FOR NEXT