முகப்பு
இந்தியா

காங்கிரசை காப்பியடித்ததற்கு நன்றி: இடைக்கால பட்ஜெட் குறித்து சிதம்பரம்

காங்கிரசை காப்பியடித்ததற்காக இடைக்கால நிதியமைச்சருக்கு நன்றி என்று இடைக்கால பட்ஜெட் குறித்து முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கிண்டல் செய்துள்ளார்.

Updated On : 31 ஜனவரி, 2024 at 7:02 AM
பகிர்:

புது தில்லி: காங்கிரசை காப்பியடித்ததற்காக இடைக்கால நிதியமைச்சருக்கு நன்றி என்று இடைக்கால பட்ஜெட் குறித்து முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கிண்டல் செய்துள்ளார்.

2019 - 2020 ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை மத்திய இடைக்கால நிதியமைச்சர் பியூஷ் கோயல் வெள்ளியன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.

தேர்தல் காலம் என்பதால் வாக்குகளைக் குறிவைத்து பட்ஜெட்டில் நிறைய சலுகை அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளதாக எதிர்கட்சிகள்மத்தியில் விமர்சனங்கள் எழுந்துள்ளன.   

இந்நிலையில் காங்கிரசை காப்பியடித்ததற்காக இடைக்கால நிதியமைச்சருக்கு நன்றி என்று இடைக்கால பட்ஜெட் குறித்து முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கிண்டல் செய்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:

நாட்டில் உள்ள நிதி ஆதாரங்களை பயன்படுத்திக் கொள்வதில் ஏழை மக்களுக்கே முன்னுரிமை என்பது காங்கிரசின் உறுதிமொழி. பட்ஜெட்டில் இதனைக் காப்பியடித்ததற்காக இடைக்கால நிதியமைச்சருக்கு நன்றி.  இடைக்கால பட்ஜெட் நாட்டின் கணக்குகளைப் பற்றிய மதிப்பீடு (Vote on Account) அல்ல; இது ஓட்டுகளின் கணக்கு (Account for Votes).    

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.