இந்தியா

தில்லியில் 4 மாடிக் கட்டடம் இடிந்து விபத்து

DIN


தலைநகர் தில்லியில் எப்போதும் மிகவும் பரபரப்பாகக் காணப்படும் கரோல்பாக் பகுதியில் புதன்கிழமை 4 மாடிக் கட்டடம் இடிந்து விழுந்தது. இதில் உயிர்ச்சேதமோ யாருக்கும் காயமோ ஏற்படவில்லை.  
இது குறித்து  தீயணைப்புத் துறை உயரதிகாரி கூறியதாவது: கரோல்பாக் பகுதியில் 4 மாடிக் கட்டடம் இடிந்து விழுந்ததாக காலை 8.40 மணியளவில் தீயணைப்புத் துறைக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக 4 தீயணைப்பு வாகனங்களுடன் வீரர்கள், மீட்புப் படையினர் அனுப்பிவைக்கப்பட்டனர். சம்பவம் நடந்த இடம் கரோல்பாக்கில் தேவ் நகரில் உள்ளது.  அந்த 4 மாடிக் கட்டடத்தில் தரை தளத்தில்  கடைகள் இருந்தன. 4-ஆவது தளம் காலியாக இருந்தது. இதில் உயிர்ச்சேதமோ யாருக்கும் காயமோ ஏற்படவில்லை. என்றார் அந்த அதிகாரி.

மோப்ப நாய் உதவியுடன் மீட்பு பணியில் ஈடுபட்ட தீயணைப்புப் படையினர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோயில் காவலாளி அடித்துக் கொலை

ஹூதிக்கள் தாக்குதலில் எண்ணெய்க் கப்பல் சேதம்

அமேதி, ரே பரேலி தொகுதி காங்கிரஸ் வேட்பாளா்கள் யாா்?: காா்கே பதில்

மண் கடத்தல்: பொதுமக்களை மிரட்டிய நபா் கைது

இரு கட்டத் தோ்தலும் பாஜகவுக்கு சாதகம்: பிரதமா் மோடி

SCROLL FOR NEXT