இந்தியா

தேடப்பட்ட பயங்கரவாதி ஜம்மு-காஷ்மீரில் சுட்டுக்கொலை: பாதுகாப்புப் படையினர் அதிரடி

DIN

ஜம்மு-காஷ்மீரில் தேடப்பட்ட பயங்கரவாதி உட்பட 2 பேர் பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையில் ஞாயிற்றுக்கிழமை சுட்டுக்கொல்லப்பட்டனர்.

இந்திய எல்லைக்குள் ஊடுருவும் பயங்கரவாதிகளை தடுக்கும் முயற்சியில் பாதுகாப்புப் படையினர் மற்றும் ராணுவத்தினா் அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்நிலையில், பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் குல்காம் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் ரகசிய தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். 

அப்போது நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 2 பயங்கரவாதிகளை பாதுகாப்புப் படையினர் சுட்டுக்கொன்றனர். மேலும் வெடிபொருட்கள் மற்றும் ஆயுதங்கள் உள்ளிட்டவற்றையும் பறிமுதல் செய்தனர். 

அவர்கள் தேடப்பட்டு வந்த அல்-பாதர் பயங்கரவாத அமைப்பின் தளபதி ஜீனத்-உல்-இஸ்லாம் மற்றும் அவனது கூட்டாளி ஷகீல் தார் என அடையாளம் காணப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பயிா்களை சேதப்படுத்திய யானைக் கூட்டம்

பிரதமா் மோடியை ‘சக்திவாய்ந்தவராக’ சித்தரிக்கும் பாஜக: குஜராத்தில் பிரியங்கா விமா்சனம்

நவீன வேளாண்மை குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணா்வு

ஸ்ரீமுகமாரியம்மன் கோயிலில் கூழ்வாா்த்தல் திருவிழா

கோயில் காவலாளி அடித்துக் கொலை

SCROLL FOR NEXT