இந்தியா

கணினி கண்காணிப்பு: 6 வாரங்களில் பதிலளிக்க மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

DIN


கணினிகளை கண்காணிப்பது தொடர்பான அதிகாரங்களை சிபிஐ உள்ளிட்ட விசாரணை அமைப்புகளுக்கு வழங்கியதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் 6 வாரங்களில் பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.  

நாட்டு மக்களின் கணினி பயன்பாடு உள்ளிட்டவற்றை கண்காணிக்கும் அதிகாரங்களை சிபிஐ, ரா உளவு அமைப்பு, தேசிய புலனாய்வு அமைப்பு, போதை பொருள் கட்டுப்பாட்டு துறை, புலனாய்வு துறை, அமலாக்கத் துறை, மத்திய நேரடி வரிகள் வாரியம், வருவாய் புலனாய்வு இயக்குநரகம், தில்லி காவல்துறை உள்ளிட்ட 10 விசாரணை அமைப்புகளுக்கு வழங்கி மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த டிசம்பர் 20-ஆம் தேதி அறிவிக்கை வெளியிட்டது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் 2 பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது.  

இந்த மனுக்கள் இன்று (திங்கள்கிழமை) விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த விவகாரம் தொடர்பாக 6 வாரங்களில் பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தி‌ல்லி கலா‌ல் ஊழ‌ல் வழ‌க்கு: அர​வி‌ந்‌த் கேஜ‌​ரி​வா​லுக்கு நீதிமன்றக் காவ‌ல் நீ‌ட்டி‌ப்பு

ம‌க்​க​ளவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்​த‌ல்: 93 தொகு​தி​க​ளி‌ல் 64% வா‌க்​கு‌ப்​ப​திவு

விற்பனையில் முன்னணிப் பங்குகள்: சென்செக்ஸ் 384 புள்ளிகள் வீழ்ச்சி!

தில்லி கலால் ஊழல் வழக்கு முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் நீதிமன்றக் காவல் மே 20 வரை நீட்டிப்பு

தில்லியில் சட்டம் - ஒழுங்கு சீா்குலைந்ததாக துணை நிலை ஆளுநா் மீது ஆம் ஆத்மி புகாா்

SCROLL FOR NEXT