இந்தியா

தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அமித் ஷா திடீர் அனுமதி

DIN

பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா, தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் திடீரென புதன்கிழமை அனுமதிக்கப்பட்டார்.
இதுகுறித்து சுட்டுரையில் அவர் வெளியிட்ட பதிவுகளில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பதால், சிகிச்சை எடுத்து வருகிறேன். கடவுள் கருணை, உங்களது வாழ்த்துகள் ஆகியவை இருப்பதால், விரைவில் நான் குணமடைந்து விடுவேன் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேநேரத்தில், தில்லி எய்மஸ் மருத்துவமனை வட்டாரத் தகவல்கள் கூறுகையில், சுவாசம் தொடர்பான பிரச்னைகள், நெஞ்சு வலி ஆகியவற்றுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இரவு 9 மணியளவில் அவர் மருத்துவமனைக்கு வந்தார். மருத்துவமனையில் உள்ள பழைய சிகிச்சை வார்டில் அமித் ஷா அனுமதிக்கப்பட்டுள்ளார். எய்மஸ் இயக்குநர் ரன்தீப் குலேரியா தலைமையிலான எய்மஸ் மருத்துவர்கள் குழு, அமித் ஷா உடல்நிலையை கண்காணித்து வருகிறது என்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அம்பேத்கர் அளித்த உரிமைகளைப் பாதுகாப்பேன்: பிரதமர் மோடி உறுதி!

பொதுமக்களுக்கு ஓஆா்எஸ் கரைசல் விநியோகம்

தொடா் திருட்டு: இளைஞா் கைது

திருக்குறள் உரை நூல் வெளியீடு

காலிக் குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்

SCROLL FOR NEXT