குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு: மிஸோரமில் போராட்டம்
மிஸோரம் மாநிலத்தில் மத்திய அரசின் குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு புதன்கிழமை பல்வேறு
மிஸோரம் மாநிலத்தில் மத்திய அரசின் குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு புதன்கிழமை பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர்.
குடியுரிமை சட்டதிருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோரின் உருவ பொம்மையை எரித்து போராட்டக்காரர்கள் தங்கள் ஆவேசத்தை வெளிப்படுத்தினர். மேலும், 7 மாவட்டங்களின் தலைநகரங்கள் மற்றும் 50க்கும் மேற்பட்ட இடங்களில் எதிர்ப்புப் பேரணியும், முழு அடைப்புப் போராட்டமும் நடத்தப்பட்டது.
இந்த மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தும் வாசகங்களை கையில் எந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷங்களை எழுப்பியபடி பேரணியில் பங்கேற்றனர்.
மிúஸா ஜிர்லாய் பெளல் (எம்இசட்பி) கட்சியின் மிúஸா மாணவர் கூட்டமைப்பு சார்பில் இப்பேரணி நடைபெற்றது. ஏற்கெனவே, இந்த அமைப்பின் சார்பில் கடந்த 8ஆம் தேதி 11 மணி நேரம் மாநிலம் தழுவிய முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட்டிருந்தது.
எம்இசட்பி தலைவர் கூறுகையில், குடியுரிமை சட்டத்திருத்த மசோதா அமல்படுத்தப்பட்டால், அது ஒட்டுமொத்த மிúஸாரம் மக்களுக்கும் எதிரானதாகவே அமையும் என்றார்.
குடியுரிமை சட்டத்திருத்த மசோதா கடந்த ஜனவரி 8ஆம் தேதி மக்களவையில் நிறைவேறியது. பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் இருந்த இந்தியாவில் குடியேறிய ஹிந்துக்கள், ஜெயின், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், புத்த மதம் மற்றும் பார்ஸி மதத்தை சேர்ந்தவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க இந்த மசோதா வழிவகுக்கிறது.