இந்தியா

குடியரசு தினம்: அட்டாரி - வாகா எல்லையில் இனிப்புப் பரிமாற்றம்

இந்தியாவின் 70வது குடியரசு தின விழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் இந்திய - பாகிஸ்தான் எல்லையில் இரு நாட்டு ராணுவத்தினருக்கும் இடையே இனிப்புப் பரிமாற்றம் நடைபெற்றது.

ANI


இந்தியாவின் 70வது குடியரசு தின விழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் இந்திய - பாகிஸ்தான் எல்லையில் இரு நாட்டு ராணுவத்தினருக்கும் இடையே இனிப்புப் பரிமாற்றம் நடைபெற்றது.

முன்னதாக, எல்லையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள இந்திய எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) வீரர்களுக்கு குடியரசு தினத்தை முன்னிட்டு இனிப்புகள் வழங்கப்பட்டது. இந்திய தேசத்தைக் காக்கும் வீரர்கள், 70வது குடியரசு தினத்தை சக வீரர்களுடன் இனிப்புப் பரிமாறிக் கொண்டாடினர்.

இந்திய - பாகிஸ்தான் எல்லைப் பகுதிகளான அட்டாரி - வாகா  எல்லையில் இந்திய எல்லைப் பாதுகாப்புப் படை அதிகாரி, பாகிஸ்தான் பாதுகாப்புப் படை அதிகாரியிடம் இனிப்பு வழங்க, பாகிஸ்தான் தரப்பிலும் இந்தியாவுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

ஆண்டுதோறும் இந்திய சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினத்தின் போது வாகா - அட்டாரி எல்லையில் இனிப்புப் பரிமாற்றம் நடைபெறுவது வழக்கம் என்றாலும், சில சமயங்களில், இந்திய - பாகிஸ்தான் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல்களை நடத்தும் போது, இனிப்புப் பரிமாற்றத்தை இந்தியா நிறுத்தி வைப்பது வழக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்தியர்களைப் போல மோசமான வார்த்தையில் விமர்சித்தேனா? முகமது ஆமிரின் கணிப்பும் விளக்கமும்!

அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள் என்னென்ன?

கேரளா அல்ல கேரளம்! மாநிலத்தின் பெயரை மாற்ற மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

சச்சினுக்கு தவறாக அவுட் கொடுத்துவிட்டேன்; 22 ஆண்டுகளுக்குப் பிறகு வருந்தும் நடுவர்!

ஐடி துறை வீழ்ச்சி எதிரொலி: பங்குச் சந்தை 1% வரை சரிவு!

SCROLL FOR NEXT