புது தில்லி: ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் என்.எஸ்.விஸ்வநாதனின் பதவிக்காலத்தை ஓராண்டு நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
மத்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநராக சக்திகாந்ததாஸ் பதவி வகிக்கிறார். ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநராக இருந்த விரால் ஆச்சாரியா கடந்த மாதம் 24-ம் தேதி தனது பதவியை ராஜிநாமா செய்தார்.
இந்நிலையில் ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் என்.எஸ்.விஸ்வநாதனின் பதவிக்காலத்தை ஓராண்டு நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
ரிசர்வ் வங்கியில் என்.எஸ்.விஸ்வநாதன் தவிர்த்து கணுங்கோ மற்றும் ஜெயின் ஆகியோர் துணை ஆளுநர்களாக இருக்கிறார்கள்.
வரும் 3-ஆம் தேதியோடு முடிவடைவதாக இருந்த விஸ்வநாதனின் பதவிக்காலம் தற்போது மேலும் ஓராண்டிற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.