கழிவுகள் சுத்திகரிப்புக்காக ரோபோட்டுகள், இயந்திரங்கள் பயன்படுத்தப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
2019-20ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார். தொடர்ந்து அவர் நிகழ்த்திய உரையில், கழிவுகள் சுத்திகரிப்புக்காக ரோபோட்டுகள் மற்றும் இயந்திரங்கள் பயன்படுத்தப்படும்.
ரோபோடிக்ஸ் போன்ற நவீன துறைகளில் இந்திய மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க முயற்சிக்கப்படும். ஸ்டார்ட்-அப் துறையை ஊக்குவிக்க தூர்தர்ஷனில் தனியே தொலைக்காட்சி உருவாக்கப்படும்.
இளைஞர்களுக்கு தொழில்நுட்ப பயிற்சி அளிக்க கவுஷல் விகாஸ் யோஜனா திட்டம் செயல்படுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.