முகப்பு
இந்தியா

நாடு முழுவதும் சிபிஐ அதிரடி சோதனை

ஊழல், ஆயுதக் கடத்தல் உள்ளிட்ட 30 வழக்குகளின் அடிப்படையில் சிபிஐ அதிகாரிகள் செவ்வாய்கிழமை அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Updated On : 31 ஜனவரி, 2024 at 9:29 AM
பகிர்:

நாடு முழுவதும் 19 மாநிலங்களில் ஊழல், கிரிமினல் குற்றம், ஆயுதக் கடத்தல் உள்ளிட்ட 30 வழக்குகளின் அடிப்படையில் சிபிஐ அதிகாரிகள் செவ்வாய்கிழமை அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

தில்லி, மும்பை, சண்டிகர், ஜம்மு, ஸ்ரீநகர், புணே, ஜெய்பூர், கோவா, கான்பூர், ஹைதராபாத், மதுரை, கொல்கத்தா, ராஞ்சி, லக்னௌ நகரங்கள் உட்பட தமிழகம், உத்தரப்பிரதேசம், ஒடிஸா, பஞ்சாப் மற்றும் ஆந்திரப்பிரதேசம் என 19 மாநிலங்களுட்பட்ட 110 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது என்று சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முன்னதாக, ரூ.1,139 கோடி வங்கி ஊழல் தொடர்பாக வங்கி அதிகாரிகள் உட்பட 13 தனியார் நிறுவனங்களில் ஜூலை மாத துவக்கத்தில் நாடு முழுவதும் இதுபோன்று அதிரடிச் சோதனைகள் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.  

முழு கட்டுரையைப் படிக்க →