இந்தியா

பிகார், உ.பி.யில் மூளை அழற்சி பாதிப்பு மரணங்கள்: உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

DIN


பிகார், உத்தரப் பிரதேச மாநிலத்தில் மூளை அழற்சியால் ஏற்பட்டுள்ள உயிரிழப்புகளை கட்டுப்படுத்தவும், நோயால் அவதியுறும் மக்களுக்கு  மத்திய, மாநில அரசுகளால் அளிக்கப்பட்ட மருத்துவ சிகிச்சைகள் குறித்து விளக்கம் அளிக்குமாறு தொடரப்பட்ட பொதுநல வழக்கில், உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப திங்கள்கிழமை உத்தரவிட்டது. 
அண்மையில் பிகார், உத்தரப் பிரதேச மாநிலங்களில் மூளை அழற்சி பாதிப்பால் 125க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்தன. நோய்  பாதிப்புகளை தடுக்கத் தேவையான நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொள்ளத் தவறிவிட்டதாக புகார் எழுந்த நிலையில், இதுதொடர்பாக இரண்டு வழக்குரைஞர்கள் உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கை தாக்கல் செய்துள்ளனர். 
இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றத்   தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் ,  நீதிபதி தீபக் குப்தா ஆகியோர் அடங்கிய அமர்வு, பிகார் மற்றும் உத்தரப் பிரதேச அரசுகளின் சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம், தலைமைச் செயலர்கள், சுகாதார செயலர்களுக்கு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவசமாக ஏன் சிகிச்சை அளிக்கக்கூடாது எனக் கேட்டு நோட்டீஸ் 
அனுப்ப உத்தரவிட்டது.  
முன்னதாக, வழக்குரைஞர் சிவ்குமார் திரிபாதி மற்றும் மற்றொரு வழக்குரைஞர் மனோகர் பிரதாப் ஆகியோர் பொதுநல வழக்கு தொடர்ந்தனர். 
அந்த மனுக்களில், நோயால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளுக்கு சிகிச்சையளிக்கத் தேவையான உள்கட்டமைப்புகளை உருவாக்கவும், அது மேலும் பரவாமல் தடுக்கவும் மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு வழிகாட்டுமாறு கோரப்பட்டிருந்தது. 
தற்போது, இவ்விரண்டு மனுக்களும் உச்சநீதிமன்றத்தால் ஒன்றாக விசாரிக்கப்பட்டு வருகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாழ்வில் வெற்றி பெற தன்னம்பிக்கை அவசியம்

ராமேசுவரத்தில் வெளிமாநில 144 மது பாக்கெட்டுகள் பறிமுதல்

கஞ்சா விற்ற இளைஞா் கைது

தோ்தலுக்காக ஊதியத்துடன் விடுப்பு வழங்க மறுப்பு: சிஐடியு புகாா்

வரத்து குறைவால் வேலூரில் மீன்கள் விலை அதிகரிப்பு

SCROLL FOR NEXT