இந்தியா

மும்பை டோங்கிரியில் 4 மாடிக் கட்டடம் இடிந்து விழுந்தது: 40 பேர் சிக்கியிருக்கலாம் என தகவல்

ANI


மும்பை: மும்பையின் டோங்கிரி பகுதியில் இருந்த 4 மாடிக் கட்டடம் இடிந்துவிழுந்து விபத்துக்குள்ளானதில் 40 பேர் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

கட்டட இடிபாடுகளுக்குள் 40 பேர் சிக்கியிருப்பதாக தகவல் கிடைத்திருப்பதை அடுத்து தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர்.

பராமரிப்பில்லாத பழைய கட்டடம் என்பதால், கடந்த வாரத்தில் பெய்த கன மழை காரணமாக இடிந்து விழுந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

முதற்கட்டமாக கட்டட இடிபாட்டில் இருந்து ஒரு குழந்தை மீட்கப்பட்டுள்ளது. கட்டடம் இடிந்துவிழுந்த இடம் மிகக் குறுகிய சாலைகளைக் கொண்டிருப்பதால் மீட்புக் கருவிகளைக் கொண்டு வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தினம் தினம் திருநாள்: தினப்பலன்

இன்றைய ராசிபலன்கள்!

அதிக வெப்ப அலையிலிருந்து தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

SCROLL FOR NEXT