இந்தியா

விரைவில் மின்னணு கடவுச்சீட்டு: வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர்

DIN


மின்னணு முறையிலான கடவுச்சீட்டுகளை (இ-பாஸ்போர்ட்) அறிமுகப்படுத்த திட்டமிட்டு வருவதாக வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்தார்.
மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு அமைச்சர் ஜெய்சங்கர், வியாழக்கிழமை அளித்த பதிலில் கூறப்பட்டுள்ளதாவது:
சிப் பொருத்தப்பட்ட மின்னணு கடவுச்சீட்டுகளை முதல்கட்டமாக 2.2 கோடி பேருக்கு வழக்க வெளியுறவு அமைச்சகம் திட்டமிட்டு வருகிறது. டிஜிட்டல் முறையில் கையொப்பம் பெறப்பட்டு அவை சிப்பில் பதிவு செய்யப்படும். அந்த சிப் தற்போதைய புத்தக வடிவ கடவுச்சீட்டுடன் பதிக்கப்படும். யாரேனும் சிப்பில் மாற்றம் செய்ய முற்பட்டால், அதைக் கண்டறிந்து உங்கள் முயற்சி தோல்வி அடைந்துவிட்டதாக அறிவிப்பு வரும் வகையிலான தொழில்நுட்பம் பயன்படுத்தப்படவுள்ளது.
உள்நாடு மற்றும் வெளிநாட்டிலிருந்து 2 நிறுவனங்கள் இந்தப் பணியில் ஈடுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது. முதல்கட்டமாக 2.2 கோடி மின்னணு கடவுச்சீட்டுகளை தயாரிக்கத் திட்டமிட்டுள்ளோம்.  மத்திய அரசு இதற்கு அனுமதி அளித்துள்ளது. மகாராஷ்டிர மாநிலம், நாசிக்கில் உள்ள இந்திய பாதுகாப்பு அச்சக நிறுவனத்தில் மின்னணு கடவுச்சீட்டைத் தயாரிப்பதற்கான பொருள்கள் கொள்முதல் செய்யப்படும் என்றார் ஜெய்சங்கர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி பிரதேச காங்கிரஸின் இடைக்காலத் தலைவராக தேவேந்தா் யாதவ் நியமனம்

தில்லி சாச்சா நேரு மருத்துவமனைக்கு மின்னஞ்சலில் வெடிகுண்டு மிரட்டல்

திகாரில் முதல்வா் கேஜரிவாலின் உடல்நிலை சீராகவுள்ளது பஞ்சாப் முதல்வா் பகவந்த் மான்

வடமேற்குத் தில்லி தொகுதியில் வெற்றி மகுடம் யாருக்கு?

ஆம் ஆத்மி எம்.பி. ராகவ் சத்தா உடல் நலமடைந்தவுடன் மக்களவைத் தோ்தல் பிரசாரத்தில் பங்கேற்பாா்

SCROLL FOR NEXT