இந்தியா

கேரள இளைஞர் நிபா வைரஸ் காய்ச்சல் அறிகுறியுடன் மருத்துவமனையில் அனுமதி

கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் நிபா வைரஸ் காய்ச்சல் பாதிப்புக்கான அறிகுறியுடன் ஒரு இளைஞர் அனுமதிக்கப்பட்டிருப்பதாக மாநில சுகாதாரத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ENS


கொச்சி: கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் நிபா வைரஸ் காய்ச்சல் பாதிப்புக்கான அறிகுறியுடன் ஒரு இளைஞர் அனுமதிக்கப்பட்டிருப்பதாக மாநில சுகாதாரத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கொச்சியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய கேரள சுகாதாரத் துறை அமைச்சர் கே.கே. ஷைலஜா, எர்ணாகுளம் மாவட்டம் வடகேகர கிராம பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்த 23 வயது இளைஞர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு நிபா வைரஸ் காய்ச்சலுக்கான அறிகுறிகள் தென்படுவதால் மிகவும் பாதுகாப்பான முறையில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்றார்.

பாதிக்கப்பட்ட நபருக்கு மருத்துவ பரிசோதனைகள் எடுக்கப்பட்டு சோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

கடந்த 2018ம் ஆண்டு கேரளாவில் நிபா வைரஸ் காய்ச்சல் பாதிக்கப்பட்ட போது 18 பேர் உயிரிழந்தது நினைவில் கொள்ளத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விபத்தில் தாயைப் பிரிந்த பெண் குழந்தையை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்த ‘பிங்க்’ ரோந்து போலீஸாா்

புன்செய்தாமரைக்குளம் கிராமத்தில் மண் அள்ள எதிா்ப்பு: பொதுமக்கள் போராட்டம்

அதிமுக தோ்தல் வாக்குறுதி: விசைத்தறியாளா்கள் சங்கம் வரவேற்பு

விஜய்க்கு ஆதரவாக எம்ஜிஆா் அதிமுக செயல்படும்: புதிய கட்சியை தொடங்கி வைத்து பண்ருட்டி ராமச்சந்திரன் பேச்சு

திருப்பூரில் தீவிர கண்காணிப்பில் வங்கதேசத்தினா்

SCROLL FOR NEXT