இந்தியா

காஷ்மீர் புல்வாமாவில் துப்பாக்கிச் சூடு: இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை 

DIN

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் புல்வாமா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினருடன் நடந்த துப்பாக்கிச் சூட்டில்,  இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள அவந்திப்போரா பகுதிக்கு அருகில் உள்ள ப்ரா பண்டினா என்ற இடத்தில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

உடனடியாக அங்கு விரைந்த பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்து துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதற்கு எதிர்வினையாக அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரைக் குறிவைத்து  துப்பாக்கியால் சுட்டனர். இரு தரப்பினருக்கும் இடையே கடுமையான துப்பாக்கிச்சண்டை நடைபெற்றது.

இந்த துப்பாக்கிச் சூட்டில்,  இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

தொடர்ந்து அந்தப் பகுதியில்  துப்பாக்கிச்சூடு நடத்தி வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்கள் மனதின் குரலைக் கேளுங்கள்: மோடிக்கு ரேடியோ அனுப்பிய ஒய்.எஸ். ஷர்மிளா

‘ப்ப்ப்ப்ப்பா’ -புருவத்தை உயர்த்த செய்த மெட் காலா அணிவகுப்பு!

இந்தியாவில் அடுத்த 10 ஆண்டுகளில் வறுமை முற்றிலும் ஒழிக்கப்படும்: ராஜ்நாத் சிங்

வாகன ஓட்டிகளுக்கு மேற்கூரை...காவல் துறை ஏற்பாடு!

பாடகி சஹீரா மீதான வரி மோசடி வழக்கு முடித்து வைப்பு!

SCROLL FOR NEXT