இந்தியா

மேற்கு வங்கத்தில் மேலும் ஒரு பாஜக நிர்வாகி படுகொலை

DIN

மேற்கு வங்கத்தின் வடக்கு 24 பர்காணாஸ் பகுதியில் மேலும் ஒரு பாஜக நிர்வாகி வெள்ளிக்கிழமை சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார். இதுகுறித்து அம்மாநில பாஜக-வினர் தெரிவிக்கையில்,

வடக்கு 24 பர்காணாஸ் பகுதியிலுள்ள அம்லாம்னி கிராம பஞ்சாயத்தின் பாஜக பெண் நிர்வாகியான சரஸ்வதி தாஸ் (42) திரிணமூல் காங்கிரஸ் கட்சியினரால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்று குற்றம்சாட்டினர்.

இந்நிலையில், வியாழக்கிழமை இரவு துப்பாக்கி குண்டு தாக்கி உயிரிழந்திருந்த பாஜக நிர்வாகி உடல் அவருடைய வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளது. இதுதொடர்பாக விசாரித்து வருகிறோம். யாரும் இன்னும் கைது செய்யப்படவில்லை என்று அப்பகுதி போலீஸார் தெரிவித்தனர்.

கடந்த சனிக்கிழமை முதல் இப்பகுதியில் பாஜக, திரிணமூல் காங்கிரஸ் கட்சியினர் இடையே கடும் பிரச்னை ஏற்பட்டுள்ளது. திரிணமூல் கட்சியினரால் 2 பாஜக நிர்வாகிகள் படுகொலை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

SCROLL FOR NEXT