இந்தியா

பாலக்கோட் தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தான் இந்திய வான் எல்லைக்குள் நுழையவே இல்லை 

IANS

குவாலியர்: பாலக்கோட் தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தான் இந்திய வான் எல்லைக்குள் ஒருபோதும் நுழையவே இல்லை என்று விமானபப்டை தளபதி பி.எஸ்.தனோனா தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் திங்களன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் கூறியதாவது:

பாலக்கோட் தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தான் இந்திய வான் எல்லைக்குள் ஒருபோதும் நுழையவே இல்லை என்பதை நான் தெளிவாகத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

ஒருவர் கூட எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டைத் தாண்டி உள்ளே பிரவேசிக்கவில்லை.

பாலக்கோட்டில் தாக்குதல் நடத்த வேண்டும் என்பது நம் விருப்பம். நாம் அதை நிறைவேற்றினோம். நமது ராணுவ நிலைகளைத் தாக்க வேண்டும் என்பது பாகிஸ்தான் ராணுவத்தின் எண்ணம்; ஆனால் அது நடக்கவில்லை.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கண்களா, ஓவியமா...!

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைக் கையாள புதிய நெறிமுறைகள் வெளியீடு

இஸ்ரேலுக்கு எதிரான வழக்கு: தென்னாப்பிரிக்காவுடன் இணையும் துருக்கி!

சிவப்பு நிற ஓவியம்...!

மல்லிப்பூ சூடிய மங்கை.. யார் இவர்?

SCROLL FOR NEXT