ஸ்ரீநகர்: புல்வாமா மாவட்டத்தில் இன்று பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நடந்த மோதலில் கொல்லப்பட்டது வீரர் அல்ல இளைஞர் என்று இந்திய ராணுவம் விளக்கம் அளித்துள்ளது.
பாதுகாப்புத் துறை செய்தித் தொடர்பாளர் ராஜேஷ் கலியா பேசுகையில், உயிரிழந்த ஷௌகத் அகமது நாயக், ராணுவத்தில் சேர்ந்தாரே தவிர, அவர் ராணுவ வீரராக பதவியேற்றுக் கொள்வில்லை.
கடந்த 2018ம் ஆண்டு ஜனவரி மாதம் அவர் ராணுவ படைக்கு ஆள் சேர்ப்பு முகாமில் பங்கேற்று தேர்வாகி, ஜம்மு காஷ்மீரில் பயிற்சி முடித்தார். அதன்பிறகு செப்டம்பர் மாதம் அவர் விடுமுறையில் சென்று மீண்டும் பணியில் சேரவில்லை.
எனவே, அவர் செப்டம்பர் மாதமே ராணுவத்தில் இருந்து விடுவிக்கப்பட்ட நபராக அறிவிக்கப்பட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.