உத்தரப்பிரதேசத்தில் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு ஒன்று மட்டும் நடக்கவில்லை: ஆதித்யநாத் பெருமிதம்
உத்தரப்பிரதேசத்தில் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு ஒரு சிறிய போராட்டம் கூட நடக்கவில்லை என்று மாநில முதல்வர் ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
லக்னௌ: உத்தரப்பிரதேசத்தில் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு ஒரு சிறிய போராட்டம் கூட நடக்கவில்லை என்று மாநில முதல்வர் ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
மேலும், மாநிலத்தில் ஆட்சிப் பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகள் கடந்திருக்கும் நிலையில் மாநில அரசு குற்றம் மற்றும் குற்றவாளிகளை கொஞ்சம் கூட சகித்துக் கொள்ளாமல் நடவடிக்கை எடுத்து வருகிறது என்றும் ஆதித்யநாத் கூறினார்.
தனது ஆட்சிக் காலத்தின் ரிப்போர்ட் கார்டை வெளியிட்டுப் பேசிய ஆதித்யநாத், உத்தரப்பிரதேசம்தான் மாநிலத்தின் ஒட்டுமொத்த அமைதிக்கும் ஒரு உதாரணமாக விளங்குகிறது.
மாநிலத்தின் மீதான மக்களின் அபிப்ராயத்தையே பாஜக தலைமையிலான ஆட்சி மாற்றிவிட்டது என்றும் ஆதித்யநாத் கூறினார்.