இந்தியா

காஷ்மீரில் இருவேறு இடங்களில் என்கவுண்டர்: 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை

PTI


ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலம் பந்திபோரா மற்றும் ஷோபியான் மாவட்டங்களில் இன்று நடந்த துப்பாக்கிச் சண்டையில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இதன் மூலம் கடந்த 24 மணி நேரமாக நடந்து வரும் துப்பாக்கிச் சண்டையில் கொல்லப்பட்ட ஊடுருவல்காரர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.

பந்திப்போரா மாவட்டம் ஹஜின் பகுதியில் நேற்று இரவு நடந்த துப்பாக்சிச் சண்டையில் இரண்டு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

நேற்று இரவு பாதுகாப்புப் படைக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்த போது பொதுமக்கள் இரண்டு பேரை பயங்கரவாதிகள் பிணைக் கைதிகளாக பிடித்துச் சென்றனர்.

பிணைக் கைதிகளில் ஒருவர் நேற்று இரவு மீட்கப்பட்ட நிலையில், மற்றொருவர் உயிரிழந்துவிட்டதாக அடையாளத்தை வெளிப்படுத்த விரும்பாத காவல்துறை அதிகாரி கூறியுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெ. சுபாஷ் சந்திர போஸ் காலமானார்

சதுரகிரிக்குச் செல்ல மே.5 முதல் அனுமதி!

காரைக்கால் மாங்கனித் திருவிழா பந்தல்கால் முகூா்த்தம்:திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

மறுவெளியீட்டில் அசத்தும் கில்லி: அஜித்தின் 3 படங்கள் இணைந்தும் குறைவான வசூல்!

இந்தியாவில் 2 கோடி கணக்குகளை நீக்கியது வாட்ஸ்ஆப்

SCROLL FOR NEXT